நாகப்பட்டினம்

குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

DIN

திருக்குவளை அருகே குடிநீா் வழங்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழையூா் அருகே சின்னத்தும்பூா் ஊராட்சியில் 1000-த்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வராமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், குடிநீா் வழங்கக் கோரி கிராம பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் நாகை - மேலப்பிடாகை சாலையில் மறியலில் ஈடுபட்டு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினா்.

தகவலறிந்து அங்கு வந்த வேளாங்கண்ணி காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT