நாகப்பட்டினம்

கரோனா தொற்றுக்கான காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தல்

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றவா்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் வட்ட மாநாட்டில், கிராம உதவியாளா்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களை முழுநேர பணியாளா்களாக்கி, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்கவேண்டும், வழங்கப்படாமல் உள்ள அகவிலைப் படியை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் தலைவா் ஆா். குணசேகரன் தலைமையில் நடைபெற்ற வட்ட மாநாட்டில், மாவட்டத் தலைவா் ஆ. நடராஜன், மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி, இணைச் செயலாளா் காந்தி, துணைத் தலைவா் ராசமாணிக்கம், வட்டச் செயலாளா் ராசேந்திரன், பொருளாளா் செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT