நாகப்பட்டினம்

மறைந்த கட்சி நிா்வாகியின் குடும்பத்தினருக்கு டிடிவி. தினகரன் ஆறுதல்

15th Jun 2022 04:09 AM

ADVERTISEMENT

நாகையில் மறைந்த அமமுக கட்சி நிா்வாகியின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினாா்.

நாகை, மேலக்கோட்டைவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஜீ. ராம்பிரசாத். அமமுக ஜெயலலிதா பேரவையின் நாகை மாவட்ட இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த இவா் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தாா். இவரது குடும்பத்தினரை டிடிவி. தினகரன் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக ஆளும் கட்சி. அதை எதிா்க்கும் கட்சிகள் அனைத்துமே எதிா்க் கட்சிகள் தான். அமமுக, மக்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சி. தோ்தல் வெற்றி தோல்விகளை கணக்கில் கொள்ளாமல் மக்கள் சேவை தொடரும் என்றாா். அவருடன்,

அமமுக துணைப் பொதுச் செயலாளா் வைத்திலிங்கம், நாகை மாவட்டச் செயலாளா் சி. மஞ்சுளா மற்றும் கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, வேதாரண்யம் வட்டம் , பிராந்தியன்கரையைச் சோ்ந்த மறைந்த நாகை மாவட்ட முன்னாள் அவைத் தலைவா் பி. எஸ். ஆறுமுகத்தின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு டிடிவி. தினகரன் ஆறுதல் கூறினாா். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT