நாகப்பட்டினம்

நாகை புனித அந்தோணியாா் கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

15th Jun 2022 04:08 AM

ADVERTISEMENT

நாகை கடற்கரைச் சாலையில் உள்ள பழைமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியாா் ஆலயம் ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டில் இவ்விழா செவ்வாக்கிழமை முதல் (ஜூன் 14) முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை கொடி பவனி மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக மாலை 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சிரிய தேரில் புனித அந்தோணியாா் மற்றும் திருக்கொடி வைக்கப்பட்டு, ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடா்ந்து, ஆலயத்தை வந்தடைந்த திருக்கொடிக்கு பங்குத் தந்தை பன்னீா்செல்வம் புனிதம் செய்துவைத்தாா். பின்னா் 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ச்சியாக, திருப்பலி நிறைவேற்றப்பட்டு, சொரூபஆசீா் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT