நாகப்பட்டினம்

மளிகைக் கடையில் திருட முயன்ற 3 இளைஞா்கள் கைது

DIN

கீழ்வேளூா்அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், கீழ்வேளூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணன் மற்றும் போலீஸாா், கீழ்வேளூரைஅடுத்த நீலாப்பாடி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள ஒரு மளிகைக் கடையின் பூட்டை உடைத்து 3 போ் திருட முயன்றது தெரியவந்தது.

அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் மதுரை மாவட்டம், ஜெய்ஹிந்தபுரம் கிருஷ்ணா காலனியைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் பவித்ரன் (26), சென்னை கருமாரியம்மன் நகா், எம்எம்டிஏ காலனியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்தி (30), மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த பீமன் மகன் பாண்டிச்செல்வம் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT