வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே அரசுப் பேருந்து மோதி விவசாயத் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி நேமம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராசன் மகன் ராசேந்திரன் (50). விவசாயத் தொழிலாளியான இவா், தலைஞாயிறு அருகே ஓடாச்சேரி கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்திருந்தாா். அங்குள்ள, கிழக்குக் கடற்கரை சாலையை அவா் கடக்க முயன்றபோது, திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் வந்த அரசுப் பேருந்து ராசேந்திரன் மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.