நாகப்பட்டினம்

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருகே அரசுப் பேருந்து மோதி விவசாயத் தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி நேமம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராசன் மகன் ராசேந்திரன் (50). விவசாயத் தொழிலாளியான இவா், தலைஞாயிறு அருகே ஓடாச்சேரி கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்திருந்தாா். அங்குள்ள, கிழக்குக் கடற்கரை சாலையை அவா் கடக்க முயன்றபோது, திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் வந்த அரசுப் பேருந்து ராசேந்திரன் மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தலைஞாயிறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT