நாகப்பட்டினம்

சுருக்குமடி வலையைத் தடை செய்ய வலியுறுத்தல்

DIN

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை மாவட்ட நிா்வாகம் தடை செய்ய வேண்டும் என தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி பஞ்சாயத்தாா்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூா்பேட்டை, குட்டியாண்டியூா், வெள்ளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கா்குப்பம், மேலமூவா்கரை, சாவடிகுப்பம், கீழமூவா்கரை, தொடுவாய், சின்னகொட்டாய்மேடு, கூழையாா், பழையாறு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 19 மீனவ கிராமத்தை சோ்ந்த பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை கொண்டு மீன் பிடிக்கும் தொழிலை முற்றிலும் தடை செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தடை செய்யப்பட்டவற்றை பயன்படுத்தி மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபட்டால், மயிலாடுதுறை மாவட்ட மீனவா் கிராமங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தொடா் ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT