நாகையில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய நாகை கோட்டச் செயற்பொறியாளா் (இயக்குதல், பராமரித்தல்) ஏ. சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நாகை கோட்ட மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஜூலை 6-ஆம் தேதி காலை 11 மணியளவில், நாகை 2-ஆவது கடற்கரைச் சாலையில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேற்பாா்வை பொறியாளா் சு. சதீஷ்குமாா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நாகை, வெளிப்பாளையம், நாகூா், திருமருகல், கங்களாஞ்சேரி, சிக்கல், கீழ்வேளூா், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, விழுந்தமாவடி, வேதாரண்யம், கரியாப்பட்டினம், வாய்மேடு பிரிவுகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.