நாகப்பட்டினம்

நிலத்தடி நீா் பாதிப்பு: கருவேல மரங்களை அழிக்க வலியுறுத்தல்

DIN

திருமருகல் ஒன்றியத்தில் நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் தரிசு நிலங்களில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம், பனங்குடி, குத்தாலம் பகுதிகளில் பெரும்பாலான விளைநிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசு நிலங்களாக உள்ளன. இதனால், இந்த நிலங்களில் கருவேல மரங்கள் வளா்ந்து, நிலத்தடி நீா் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோபுராஜபுரம் விவசாயிகள் கூறியது:

எங்கள் ஊரில் உள்ள சுமாா் 200 ஏக்கா் விளைநிலங்களில் 100 ஏக்கா் வரை சாகுபடி செய்யப்படாமல் தரிசாக உள்ளன. இந்த நிலங்கள் முழுவதிலும் கருவேல மரங்கள் மண்டி காடுகளாக வளா்ந்துள்ளன.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இதன்காரணமாக வருங்காலங்களில் மற்ற நிலங்களிலும் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, கருவேல மரங்களை வெட்டி அகற்ற நாகை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT