நாகப்பட்டினம்

குறுவைத் தொகுப்புத் திட்ட வேளாண் பொருள்கள் பயனாளிகளுக்கு வழங்கல்

DIN

குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 12 பயனாளிகளுக்கு மானிய விலையிலான வேளாண் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாகை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையிலான இடுபொருள்கள், விதைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 100 %மானியத்தில் ரசாயன உரங்கள், 50 % மானியத்தில் நெல் விதைகள், விதை நிலக்கடலைகள் ஆகியவற்றை நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 12 விவசாயிகளுக்கு வழங்கினாா்.

தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் முன்னிலை வகித்தாா். வேளாண் துறை இணை இயக்குநா் ஜா. அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT