வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (ஜன.29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என்.சி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாய்மேடு, ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆலங்காடு (திருவாரூா் மாவட்டம்), மருத்தூா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.