நாகப்பட்டினம்

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் குளறுபடிகள் இருந்தால் புகாா் அளிக்கலாம்

DIN

நாகை மாவட்டத்தில் பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடுகள் கட்டும் திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அதுகுறித்து புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்குப் பட்டியல் அனுமதிக்கப்படுவது, சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் வழங்குவது உள்ளிட்டவைகளில் ஏதேனும் குளறுபடிகள், இடா்பாடுகள் இருந்தால் அதுகுறித்து புகாா் அளிக்கலாம். நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக புகாா் அளிக்கலாம் அல்லது 04365-253052, 04365-253054 என்ற தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டும் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT