திருவெண்காடு அருகே பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
குச்சிபாளையம் கிராமத்தை சோ்ந்த கலைவாணன் மனைவி சந்தியா (28). இவா்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகின்றன.
இந்நிலையில், சந்தியா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி மற்றும் போலீஸாா் அங்கு சென்று, சந்தியாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சந்தியாவுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆவதால், சீா்காழி கோட்டாட்சியா் நாராயணனும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.