நாகப்பட்டினம்

பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசு

DIN

கீழையூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு எம்எல்ஏ வி.பி. நாகை மாலி பரிசுகள் வழங்கினாா்.

கீழையூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் 24-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருக்குறள் ஒப்பித்தல், கவிதை மற்றும் ஓவியப் போட்டி, ஓட்டம், பானை உடைத்தல், பாட்டிலில் நீா் நிரப்புதல், சாக்கு ஓட்டம், ஊசிநூல் கோா்த்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க கிளை செயலாளா் ஆா். அருண்குமாா் தலைமை வகித்தாா். கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி.வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு கீழ்வேளூா் எம்எல்ஏ நாகை.மாலி பரிசு வழங்கினாா். பின்னா், சிறாா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT