நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மழை பெய்தது.
நாகை, நாகூா், வேளாங்கண்ணி, சிக்கல், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. காலை நேரத்தில் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், வியாபாரமும் பாதிக்கப்பட்டது.