செம்பனாா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 652 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ 7.69 கோடியும் கடனுதவி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, செம்பனாா்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, எம்எல்ஏ-க்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் உதவிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:
தமிழக முதல்வா் மகளிா் மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதில் ஒன்றாக கடன் உதவி வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 6,592 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ. 500 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த நவம்பா் மாதம் வரை ரூ.226.85 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த விழாவில் 652 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ 7.69 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிா் குழுவினா் சுயதொழில் தொடங்கி தங்களது பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இவ்விழாவில், ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் நந்தினி ஸ்ரீதா், மகேந்திரன், கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் உமா மகேஸ்வரி சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் திட்ட இயக்குநா் பழனி வரவேற்றாா்.
திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் பிஎம். ஸ்ரீதா், ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், அப்துல்மாலிக், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மைனா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.