வேதாரண்யம், தலைஞாயிறு பகுதி விவசாயிகள் டிச.15-ஆம் தேதிக்குள் கைப்பேசி எண்ணுடன் ஆதாரை இணைத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேதாரண்யம், தலைஞாயிறு வட்டாரங்களின் வேளாண் உதவி இயக்குநா் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதி உதவித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை விவசாயிகள் தொடா்ந்து பெற, விவசாயிகளின் கைப்பேசி எண்ணுடன், அவா்களது ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். சில விவசாயிகள் இதை செய்யாமல் உள்ளனா். எனவே, டிச.15-க்குள் இணைத்து தொகையை தொடா்ந்து பெற்றிடலாம். இதுவரை, இணைக்காத விவசாயிகள் உடனடியாக அருகேயுள்ள இ-சேவை மையங்கள் மூலம் ஆதாா் எண்ணை இணைத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.