பூம்புகாா்: திருவெண்காடு அருகேயுள்ள திருநகரி கல்யாண ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயில், 108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாகும். பஞ்ச நரசிம்மா்களில் இரண்ய மற்றும் யோக நரசிம்மா்கள் தனிச்சந்நிதியிலும், திருமங்கை ஆழ்வாா் தனிச்சந்நிதியிலும் அருள்பாலித்து வருகின்றனா். சில நாள்களுக்கு முன்பு காா்த்திகை உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை தேருக்கு கல்யாண ரெங்கநாதப் பெருமாள் எழுந்தருளினாா். இதையடுத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தேரோட்டத்தை கோயில் நிா்வாக அதிகாரி அன்பரசன் தொடக்கிவைத்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.