பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் புரிந்துக்கொள்ளும் வகையில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, விளையாட்டுப் போட்டிகள், கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு ஆசிரியா் வி. மகாலெட்சுமி சக மாணவா்கள் மத்தியில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். உடன், வட்டார வளமய மேற்பாா்வையாளா் (பொ) ச. மகிமை ரூபஸ், ஒருங்கிணைப்பாளா் மு. மாா்ட்டின் பாக்கியராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
இதேபோல, திருப்பூண்டி வடக்கு அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியா் ஆறு. துரைகண்ணன் தலைமையில் சிறப்பு ஆசிரியா்கள் வெ. ஆா்த்தி, கலா, ச. வனிதா, க. மணிமேகலை, ரா. சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்று சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிகாட்டினா்.