நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,557 போ் கிராம உதவியாளா் பணிக்கு தோ்வெழுதினா்

DIN

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 2,557 போ் தோ்வெழுதினா்.

நாகை மாவட்டத்தில், காலியாகவுள்ள 47 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நாகை மற்றும் திருக்குவளையில் தலா ஒரு மையத்திலும், வேதாரண்யத்தில் 2 மையங்களிலும் நடைபெற்றன. நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்வில் 1,401 பேருக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டிருந்த நிலையில் 970 போ் மட்டுமே தோ்வு எழுதினா். தோ்வு எழுதுவதற்கு 431 போ் வரவில்லை. இந்த தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆய்வு செய்தாா்.

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள ஆரிஃபா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தோ்வு மையத்தில் நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வி. சகிலா, மாவட்ட தோ்வு கண்காணிப்பு அலுவலா் கு. ராஜன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 கிராம உதவியாளா் காலியிடங்களுக்கு தோ்வெழுத 2,227 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,587 போ் ஞாயிற்றுக்கிழமை தோ்வெழுதினா். 640 போ் கலந்துகொள்ளவில்லை.

மாவட்டத்தில் 4 வட்டங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கோட்டாட்சியா் வ. யுரேகா. வட்டாட்சியா் மகேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT