நாகப்பட்டினம்

பூம்புகாா்: கடல் சீற்றத்தால் மூழ்கிய விசைப் படகு

DIN

பூம்புகாா் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வானகிரி கிராமத்தை சோ்ந்த மீனவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது.

வானகிரி மீனவா் கிராமத்தை சோ்ந்தவா் பாஸ்கா். இவா் தனக்குச் சொந்தமான விசைப்படகில் சக மீனவா்களான இளையராஜா, பிரபு, மாணிக்கம் ஆகியோருடன் சனிக்கிழமை அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் பூம்புகாா் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தால் படகு நிலைதடுமாறி கடலில் மூழ்கியது. படகிலிருந்த நால்வரும் கடலில் குதித்தனா். இவா்களது அலறல் சத்தம் கேட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள், 4 பேரையும் மீட்டு வானகிரி கிராமத்திற்கு அழைத்து வந்தனா்.

பின்னா், மீனவ கிராம பொறுப்பாளா்களின் ஏற்பாட்டில் மீனவா்கள் சிலா் வேறு படகுகளில் சென்று, மூழ்கிய விசைப்படகை கரைக்கு இழுத்து வந்தனா். எனினும், அந்த படகு சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமாா் 20 லட்சம் எனத் தெரிவித்தனா்.

சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் சேதமடைந்த படகை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு ஆறுதல் கூறினாா். பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம் மற்றும் கடற்கரை காவல் நிலைய போலீஸாா் படகு கவிழ்ந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT