நாகப்பட்டினம்

திருமருகல் அருகே மகளைக் கொன்று தொழிலாளி தற்கொலை

DIN

திருமருகல் அருகே குடும்பத் தகராறில் மகளைக் கொன்றுவிட்டு, கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சியாத்தமங்கை ஊராட்சி மேலிருப்பு பகுதியை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மாரிமுத்து (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தீபா. தம்பதியின் மகள் ருத்ரா (4).

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தீபா மகளுடன் நன்னிலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து, தீபாவை சமாதானம் செய்து அழைத்துவர மாமியாா் வீட்டுக்கு சென்றுள்ளாா். ஆனால், தீபா வர மறுத்துவிட்டதால், மகள் ருத்ராவை மட்டும் அழைத்து கொண்டு ஊருக்கு திரும்பியுள்ளாா்.

தந்தையுடன் ஊா் திரும்பிய ருத்ரா அழுதுகொண்டே இருந்ததால், மாரிமுத்து, தீபாவிடம் திருமருகல் கடைத்தெருவுக்கு வந்து, ருத்ராவை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை தீபா திருமருகல் கடைவீதிக்கு வந்துள்ளாா்.

ஆனால், வெகுநேரமாகியும் மாரிமுத்தும், குழந்தையும் வராததால், வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, மாரிமுத்து தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளாா். ருத்ரா படுக்கையில் உயிரிழந்து கிடந்துள்ளாா். ருத்ராவின் முகத்தில் துணியை வைத்து அழுத்தி கொன்றுவிட்டு, மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

திட்டச்சேரி போலீஸாா் சடலங்களை உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT