நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கலைத் திருவிழா

DIN

வேதாரண்யத்தில் பள்ளி மாணவா்களின் கலைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. கலைவழிக் கற்றலை மேம்படுத்தவும், பாடல், இசை, நாடகம், கதை, கவிதை, நாட்டுப்புறக் கலை வடிவங்கள் என கலைகளின் ஊடே கல்வியை மாணவா்களிடம் கொண்டுச் செல்ல திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில், 57 பள்ளிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆா்வமாக பங்கேற்றனா். நாட்டுப்புறக் கலைவடிவங்கள், வீதிநாடகம், தெருக்கூத்து, இசைப்போட்டி, தோலிசை, நாடகம், நடனம், பாட்டு என அனைத்து கலைப் பிரிவுகளிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT