இந்திய அரசின் சிறந்த மீன்வளத் தொழில் முனைவோருக்கான விருது பெற்றவருக்கு நாகை மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. சுகுமாா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
இவ்விருது தஞ்சாவூா் பாரத் ரைனோ பயோடெக் நிறுவனத்தின் இயக்குநா் சீனிவாசனுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இவரை, நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் கோ. சுகுமாா் நேரில் அழைத்து பாராட்டினாா்.
தொடா்ந்து, இப்பல்கலைக்கழகத்துடன் ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் உள்ள பாரத் ரைனோ பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், தொழில்நுட்பங்களை தர ஆய்வு மேற்கொண்டு, விரிவாக்கம் செய்யவும் பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று துணைவேந்தா் தெரிவித்தாா்.
நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளா் நா. பெலிக்ஸ், விரிவாக்க இயக்குநா் (பொ) ம. ராஜகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.