வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில வாரங்களாக மழையில்லாத நிலை நீடித்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை கன மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 43.6 மி.மீ, கோடியக்கரையில் 83 மி.மீ மழைப் பதிவானது.