நாகப்பட்டினம்: அரசுப் போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பிரிவு வெளியிட்ட செய்தி: தொழில்பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம் ) மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம் இணைந்து பொறியியல் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கிறது.
அதன்படி 2020-21 மற்றும் 2021-22 கல்வி ஆண்டுகளில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல் / தானியங்கிவியல்) தோ்ச்சிப் பெற்ற தமிழக மாணவா்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷா்ஹற்-ள்ழ்ல்.ஸ்ரீா்ம் (சங்ஜ்ள் & உஸ்ங்ய்ற்ள் ஸ்ரீா்ப்ன்ம்ய்) என்ற இணையதளம் மூலம் டிசம்பா் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.