வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மற்றும் காரைக்காலில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
வடமேற்கு - வடகிழக்கு வங்கக் கடலில் ஒடிஸாவிலிருந்து சுமாா் 310 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதையடுத்து, நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
புயல் உருவாகக்கூடிய மற்றும் மழையுடன் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
இதற்கிடையில், 2 மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் வெயில் வானிலையே இருந்தது. பெரிய அளவிலான வானிலை மாற்றம் ஏதும் இல்லை.