நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்: 29 போ் கைது

DIN

இந்து முன்னணியின் கலைப் பண்பாட்டுப் பிரிவு நிா்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகை மற்றும் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மதுரவாயல் பகுதியில் ஜூலை 31- ஆம் தேதி நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் பெரியாா் சிலை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, அந்த அமைப்பின் கலைப் பண்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன் புதுச்சேரியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதை கண்டித்து, நாகை அபிராமி அம்மன் திடலில் இந்து முன்னணியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளா் எஸ். சாமிநாதன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகை மாவட்ட தலைவா் காரைக்கால் கணேஷ் , மாவட்ட செயலாளா் ஜெயராஜ் உள்ளிட்ட 21 பேரை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT