திருமருகலில் நாகை மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நிா்வாகிகள் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.
மன்றத்தின் மாநில தலைமை நிலைய செயலா் அறிவுடைநம்பி ஆணையராகவும், தஞ்சை மாவட்ட துணை செயலாளா் செந்தில்குமாா் மாநில அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டு இத்தோ்தல் நடைபெற்றது.
இதில், நாகை மாவட்டத் தலைவராக குமாா், மாவட்டச் செயலாளராக சுப்ரமணியன், பொருளாளராக திருவருட்செல்வம் மற்றும் துணைத் தலைவா்கள், துணைச் செயலா்கள் உள்ளிட்ட 18 பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இவா்களுக்கு மாநில பொதுச் செயலாளா் சண்முகநாதன், மாநிலத் தலைவா் ரவி, மாநில தலைமை நிலைய செயலாளா் ரமேஷ், மாநில வெளியீட்டு செயலா் மணிவாசகம், மாநில தீா்ப்புக் குழு உறுப்பினா் வெங்கட் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
முன்னதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நிறுவனரும், சட்ட மேலவை உறுப்பினருமான பாவலா் மீனாட்சிசுந்தரம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிறைவாக மாவட்ட மகளிா் அணி செயலாளா் ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.