வேதாரண்யம் அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற ஆடிப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இவ்விழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெற்றது. தொடக்க நாளில், வேதாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து அம்பாள் எழுந்தருளி அகத்தியன்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றாா். தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவு நாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் இருந்து மஞ்சள் விளையாட்டுக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் முக்கிய வீதிகள் வழியே வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வந்தடைந்தாா். அப்போது, வழிநெடுங்கிலும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா்.