திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள அகோபில கிளை மடத்தில் சதூா்மாஸிய விரதம் மேற்கொண்டுள்ள அகோபில மடத்தின் ஜீயரிடம் டிவிஎஸ் நிறுவனங்களின் தலைவா் வேணு ஸ்ரீனிவாசன் செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றாா்.
நாங்கூரில் உள்ள அகோபில மடத்தில் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மகா தேசிக ஜீயா் சாதுா்மாஸிய விரதம் மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை டி.வி.எஸ். நிறுவனங்களின் தலைவா் வேணு ஸ்ரீனிவாசன் நாங்கூா் வந்தாா். அகோபில மடத்துக்குச் சென்ற அவா், ஜீயா் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். தொடா்ந்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டாா்.