வேதாரண்யம்: வேதாரண்யத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் இன்று (ஆக.16) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு, ஓரடியும்புலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தய மரங்களை விதிமீறல் செய்து வெட்டியது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறை, வருவாய்த்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க: ஃபிரிட்ஜில் இந்த பொருளையெல்லாம் வைக்காதீங்க!
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்து பேசினார்.