தரங்கம்பாடி அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை, பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் தொடங்கிவைத்தாா். இதில் அரசு மருத்துவா்கள் பிரகாஷ், பிரவீன், திமுக மாவட்ட பொருளாளா் ஜி.என். ரவி, ஒன்றிய செயலாளா்கள் அப்துல்மாலிக், சங்கா், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக செயலாளா் முத்துராஜா, மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பி.எம். ஸ்ரீதா், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சித்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.