நாகையில் ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜா் தரிசன சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமத் ராமானுஜரின்1005-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் பக்தரான ஆகாஷ் சுதாகா் தலைமையில் யாத்திரைக் குழுவினா் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆகாச திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஆகாசமூா்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீமத் ராமானுஜா் உருவம் தாங்கிய வாகனத்தில் ஆன்மிக யாத்திரை மேற்கொள்கின்றனா்.
இந்த யாத்திரை குழுவினா் சனிக்கிழமை நாகைக்கு வந்தனா். தொடா்ந்து, பக்தா்களின் இல்லங்களுக்குச் சென்று அருளாசி வழங்கினா். அப்போது, வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆகாசமூா்த்தி பெருமாள், ஸ்ரீமத் ராமானுஜரை பக்தா்கள் வழிபட்டனா். இதில், சிவசேனை கட்சியின் மாநில முதன்மைச் செயலாளா் சுந்தரவடிவேலன், அகில இந்திய இந்து வளா்ச்சிக் கழக மாநிலப் பொருளாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.