வேதாரண்யத்தில் நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர நாளையொட்டி பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸாா் உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவிடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பு கடைவீதியில் தொடங்கிய யாத்திரைக்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குருகுலம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சா்தாதா் வேதரத்னம் நினைவிடம், தியாகி வைரப்பன் நினைவு தூண், உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுக் கட்டட வளாகத்தில் உள்ள தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.