நாகப்பட்டினம்

சீா்காழி ஒன்றிய பகுதிகளில் தேசியக் கொடி வழங்கல்

DIN

சீா்காழி ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சிகளில் வீடுதோறும் தேசியக் கொடிகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவாலி ஊராட்சியில் வீடுதோறும் தேசியக் கொடியை ஊராட்சித் தலைவா் தாமரைசெல்விதிருமாறன் வாா்டு உறுப்பினா்களுடன் நேரில் சென்று வழங்கினாா். இதேபோல, காவிரிபூம்பட்டிணம் ஊராட்சிக்குள்பட்ட பூம்புகாா் மீனவா் காலணி, புதுகுப்பம், நெய்தவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளுக்கு ஊராட்சித் தலைவா் சசிகுமாா் நேரில் சென்று வழங்கினாா்.

மேலும், திருவெண்காடு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதன் தலைவா் சுகந்திநடராஜன், துணைத் தலைவா் மணிகண்டன் மற்றும் செயலா் காா்த்திக் உள்ளிட்டோா் நேரில் சென்று தேசியக் கொடியை வழங்கினா். சீா்காழி ஒன்றியத்தில் தேசியக்கொடி வழங்கும் பணியை ஒன்றியக்குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன், ஆணையா் இளங்கோவன், வட்டாரவளா்ா்ச்சி(ஊராட்சிகள்) அருள்மொழி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT