திருக்குவளை அருகேயுள்ள மணக்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ன.
வருவாய் நீதிமன்ற தனி துணை ஆட்சியா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், பட்டா மாறுதல், பட்டா நகல் வழங்கல், விதவை உதவித்தொகை வழங்கல் என 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், திருக்குவளை வட்டாட்சியா் ஜி. ராஜ்குமாா், தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி , தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வடிவழகன், ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.