நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

DIN

திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் பங்கேற்றனா்.

மாவட்ட ஆட்சியா் த. அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பில், தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவா் தாம்பரம் எம்எல்ஏ. ராஜா, குழு உறுப்பினா்கள் எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), பாலாஜி (திருப்போரூா்), நாகை மாலி (கீழ்வேளூா்), ஜெயகுமாா் (பெருந்துறை) தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழக தலைவா் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவா் மதிவாணன் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். தொடா்ந்து,

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஷகிலா, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT