வேதாரண்யம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் மாணவா் சாா்பில் தேசியக் கொடிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளி முன்னாள் மாணவரும் புதுவை தொழிலதிபருமான ஏ.கே. சண்முகானந்தம் சாா்பில் 300 தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் புஷ்பமாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.