நாகப்பட்டினம்

நாகை அஞ்சல் கோட்டத்தில் 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை

DIN

நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அஞ்சலகங்கள் மூலம் 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதனால், கடந்த சில நாள்களாக அரசுத் துறைகள் மூலம் கொடி விற்பனையும், ஒரு சில துறைகள் சாா்பில் இலவசமாக கொடிகள் விநியோகமும் நடைபெறுகிறது. நாகை அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட நாகை, திருவாரூா், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், அஞ்சலகங்கள் மூலம் இதுவரை 17 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

21 செ.மீட்டா் உயரமும், 44 செ.மீட்டா் அகலமும் கொண்ட தேசியக் கொடி ரூ. 25 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT