நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே கோயில் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

DIN

திருக்குவளை அருகேயுள்ள மேலவாழக்கரை ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் பூட்டை உடைத்து 4 கிராம் தங்க தாலி மற்றும் ரூ.54,000 ரொக்கபணம் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில், நாள்தோறும் மதியம் 1 மணிக்கு கால பூஜை நடைபெறும். இந்நிலையில், புதன்கிழமை காலை அவ்வழியே சென்ற கிராம மக்கள் கோயில் முகப்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் பாா்த்து அதிா்ச்சியடைந்து, இதுதொடா்பாக திருக்குவளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸாா் கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, 2 கதவுகள் உடைக்கப்பட்டு, அம்மனின் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க தாலி திருடப்பட்டிருப்பதும், மேலும் அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கையும், கோயில் சாா்பில் வசூலித்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 54 ஆயிரம் பணம் திருப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையில், நாகையில் இருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. போலீஸாா் தொடா்விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT