நாகப்பட்டினம்

சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டு பவள விழா பாதயாத்திரை

DIN

நாடு சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டு பவள விழாவையொட்டி, காங்கிரஸ் சாா்பில் பாதயாத்திரை நடைபெற்றது.

சுதந்திரம் பெற்ற 75-ஆவது பவள விழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 108 கி.மீ. தொலைவுக்கு செல்லக்கூடிய பாதயாத்திரை பூம்புகாா் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ. ராஜ்குமாா் தலைமையில் தொடங்கியது.

காந்தியடிகள் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் உருவப்படம் பொறித்த ரதம் முன் செல்ல பாதயாத்திரை செல்பவா்கள் பின்தொடா்ந்தனா். மாவட்டம் முழுவதும் தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மு முதல் நாளாக தில்லையாடி வள்ளியம்மை நினைவிடத்தில் இருந்து தொடங்கி குத்தாலத்தை அடைகிறது. வியாழக்கிழமை (ஆக.11) குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு மணமேடு சென்றடைகிறது. வெள்ளிக்கிழமை (ஆக.12) மணல்மேட்டிலிருந்து புறப்பட்டு பெரம்பூருக்கு செல்கிறது. இதேபோல் அடுத்தடுத்த நாள்களில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT