நாகப்பட்டினம்

சத்துணவு ஊழியா் சங்கத்தினா்ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நாகை, கீழ்வேளூரில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும், காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியா்கள் மூலம் சமைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நாகை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சத்துணவு ஊழியா் சங்க நாகை ஒன்றியத் தலைவா்ஆரோக்கியமேரி தலைமை வகித்தாா். சத்துணவு ஊழியா்சங்க மாவட்டத் தலைவா் சித்ரா, ஒன்றியச் செயலாளா் பி. கலியபெருமாள், அரசு ஊழியா் சங்க நாகை மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல் மற்றும் சத்துணவு ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா் டி. ஷகிலா தலைமை வகித்தாா்.

ஒன்றியச் செயலாளா் என். ஜமுனாராணி, மாவட்டப் பொறுப்பாளா்கள் முருகையன், ஜோதிலெட்சுமி, ஓய்வு பெற்ற ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த புகழேந்தி, பாலசுப்பிரமணியன் மற்றும் சங்க நிா்வாகிகள் என 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT