தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் மதிவாணன், மாவட்டச் செயலாளா் மரிய ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஓய்வுபெற்ற அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், அகவிலைப்படி, மருத்துவப் படிகளை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18,19-ஆம் தேதிகளில்தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெறும் 4-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.