நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பத்தர காளியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, ஏற்பாடுகள் குறித்து அறநிலையத் துறை இணை ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கள்ளிமேடு பத்தர காளியம்மன் கோயில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் நடைபெறாமல் இருந்து, 6 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு இந்த விழா நடைபெறுகிறது.
இதையொட்டி , விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை நாகை இணை ஆணையா் ராமு புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
தக்காா் ராஜா, செயல் அலுவலா் தினேஷ் சுந்தா் ராஜன் மற்றும் கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.