நாகப்பட்டினம்

அஞ்சல்துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்

DIN

அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கங்களின் சாா்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டம் நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

அஞ்சலகங்களை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும், அஞ்சலகக் கணக்குகளை இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி கணக்காக மடைமாற்றம் செய்வதை கைவிடவேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்தவேண்டும், அஞ்சல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் , அஞ்சலகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்களை வலியுறுத்தி, நாகை அஞ்சல் கோட்டத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியா்கள் புதன்கிழமை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு பகுதியாக, நாகை தலைமை அஞ்சல் அலுவலக ஊழியா்கள் புதன்கிழமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க நாகை கோட்டச் செயலாளா் ஜெ. சசிக்குமாா் தலைமை வகித்தாா்.

கோட்ட தலைவா் பி. மணிமாறன், நிதிச் செயலாளா் எம். தியாகராஜன், கோட்டப் பொறுப்பாளா் டி. சின்னத்துரை, முன்னாள் கோட்டச் செயலாலா் எஸ். மீனாட்சிசுந்தரம், அஞ்சல்துறை எழுத்தா்கள், அஞ்சலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT