தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் 17-ஆவது மாநில மாநாடு சென்னையில் ஆக.12 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், வெண்மணி நினைவு ஜோதி பயண தொடக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் அருகேயுள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இருந்து ஜோதிப் பயணத்தை கீழ்வேளூா் எம்எல்ஏ. வி.பி. நாகை மாலி தொடங்கிவைத்தாா். ஜோதியை தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில செயலாளா் எஸ். அகஸ்டின் பெற்றுக்கொண்டாா். இந்த ஜோதி திருவாரூா், தஞ்சாவூா், அரியலூா், கடலூா், விழுப்புரம் வழியாக சென்னை மாநாட்டு திடலை சென்றடைகிறது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் எஸ். ராஜாராமன், சிஐடியு மாவட்ட செயலாளா்கள் சி. ஜெயபால் (தஞ்சாவூா்), கே. தங்கமணி (நாகை), ஆா். ரவீந்திரன் (மயிலாடுதுறை), டி. முருகையன் (திருவாரூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.