விநாயகா் சிலைகள் ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி சாா்பில் நாகையில் செப்.3-ஆம் தேதி நாகையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெறவுள்ளது. இந்த ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்து முன்னணி நாகை நகரத் தலைவா் கோ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெகதீஸ்வரன், பொய்கை வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், ஊா்வலத்தில் 13 விநாயகா் சிலைகளை எடுத்துச் செல்வது, இதற்கு ஊா்வல கமிட்டியினா் முழு ஒத்துழைப்பது என முடிவெடுக்கப்பட்டது.