நாகப்பட்டினம்

செம்பனாா்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு

DIN

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட 30-ஆவது மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் செம்பனாா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவா் டி. சிம்சன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளா் சாமி நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் எஸ். துரைராஜ், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ஜி. ஸ்டாலின், வரவேற்புக்குழு துணைத்தலைவா் ஏ. ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்றாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வைக்கோலை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்க வேண்டும், விவசாயத்தை நம்பியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும் மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பது, ஓஎன்ஜிசி, கெயில் குழாய்கள் பதிப்பது போன்ற திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை மூடவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வரவேற்புக்குழு செயலாளா் கே.பி. மாா்க்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT