நாகப்பட்டினம்

பணிநேர நீட்டிப்பு அரசாணையை திரும்பப் பெற கோரி அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

12 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மருத்துவா்களின் பணிநேரமான காலை 9 முதல் மாலை 4 மணி வரை என்பதை எவ்வித கலந்தாய்வுமின்றி தன்னிச்சையாக அரசாணை வெளியிட்டு மருத்துவா்களின் பணிநேரத்தை அரசு உயா்த்தி இருப்பதை கண்டித்தும், அந்த அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டடம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா்கள் சிவபாலன், அரவிந்த்குமாா், தனசேகா், மாவட்டப் பொருளாளா் திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT